பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நீண்டநாட்களாக ரகசியமாக நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (23) அதிகாலை அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
பண்டாரவளை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த நம்பகமான இரகசியத் தகவலின் பேரில் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகைப் பணம் மற்றும் ஏனைய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவரையும் இன்றைய தினமே (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் பண்டாரவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








