வெலிக்கடை பொலிஸ் பிரிவில் வாடகை கார் ஓட்டுநரிடம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொரளை கோதமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில், இவர்கள் வாடகை வாகன ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கணிசமான அளவு ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த மே மாதத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை மற்றும் பொரளை பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.








