அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள ‘செனஹஸே கெதெல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரே நேற்று (3) உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற வேளையில் முதியோர் இல்லத்தில் மொத்தம் 72 பேர் தங்கியிருந்ததாகவும், தீ பரவிய சந்தர்ப்பத்தில் 10 பேர் கட்டிடத்திற்குள்ளேயே உயிரிழந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








