நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 477 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை கப்பல் ஒன்று களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனைக்குட்படுத்தியுள்ளது.
அப்போது, 13 பைகளில் அடைக்கப்பட்டிருந்த 477 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச் சென்ற இரு நபர்களும் டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு செட்டப்படுவ பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








