மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்து சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும், மற்றுமொரு நபரும் இன்று (06) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையானபோது, பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








