ஈரானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஷைனப் தஸ்திக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டிருந்ததாக ஷைனப் தஸ்தி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்ததையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஈரானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஷைனப் தஸ்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்து, முன்னர் வழங்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் கருத்துச் சுதந்திர ஆதரவாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.








