கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை தொழிலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் மின்சாரம் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தருமபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
முறையற்ற மின் இணைப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








