ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தில் எஞ்சியிருக்கும் தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்குள் கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், அனைத்து பொருட்களின் ஏற்றுமதியாளர்களும் தங்களுக்குக் கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்காக பயன்படுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையை உள்நாட்டு நாணயமான இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாட்டின் அந்நியச் செலாவணி முகாமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.








