பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக விரைவில் முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான ஆரம்ப மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறுகிய காலத்திற்குள் குறித்த சட்டம் நாடாளுமன்றத்தின் ஊடாக முற்றாக ஒழிக்கப்பட்டு வரலாற்றில் இருந்து நீக்கப்படும் எனவும், தற்போதைய அரசாங்கத்திற்கு அடக்குமுறைச் சட்டங்களை பயன்படுத்தி ஆட்சி நடத்த வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கியுள்ள வலுவான ஆணையே தனது பலமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் வகையில் அடுத்தகட்ட சட்டச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.








