உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தாம் தீக்குளிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாக முகப்புத்தகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தாம் தீக்குளிக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








