கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பம் கோரி 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் எதிர்வரும் 27ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








