ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் கட்டமைப்புகள், விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அந்நாட்டின் தாக்குதல் திறன்களின் பெரும்பகுதியும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகவும் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும்.
மேலும், எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் ஈரானின் கார்க் தீவும், முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களும் எங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். அதோடு, வெனிசுலா தொடர்பில் நாம் பின்பற்றும் அணுகுமுறையைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம்.
இந்த நடைமுறை அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் பயனளித்தது போலவே, எதிர்காலத்திலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.”
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அமெரிக்கா – ஈரான் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.







