அமெரிக்கா, ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைமையுடனும், பிராந்தியத்தின் பல நாடுகளுடனும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தத்தின் கையெழுத்திடும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








