லுணுகம்வெஹேர, உனாத்துவெவ பகுதியில் இன்று (11) இடம்பெற்ற சாலை விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லுணுகம்வெஹேர – உனாத்துவெவ 170ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பதுளையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த மற்றொரு தனியார் பேருந்தும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹேர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








