நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இலங்கைக்கு மொத்தம் 184,750 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40.7 சதவீத உயர்வாகும். 2024 ஆம் ஆண்டில் நாட்டின் அரிசி இறக்குமதி அளவு 131,338 மெட்ரிக் தொன் ஆக இருந்தது.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த நெல் உற்பத்தி 5,053,698 மெட்ரிக் தொன் ஆக உயர்ந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீத வளர்ச்சி எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக சந்தையில் அரிசி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபை 2025 ஆம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து 162,257 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்ய 19,633 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
அத்துடன், அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் விவசாயத் துறைக்காக மொத்தமாக 142 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








