Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

பாகிஸ்தானில் மேலதிக வகுப்பு கூரை இடிந்து 14 சிறுவர்கள் மரணம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கூரை நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வகுப்பில் இருந்தபோதே கூரையின் பழுதுபார்க்கும் பணிகளும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கூரையின் மீது அதிகளவில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே அது இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ விசாரணை நிறைவடைந்த பின்னரே விபத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப், “இது நெஞ்சை பதறவைக்கும் பேரவலம். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை
செய்திகள்

அமைச்சர் சந்திரசேகர் விஜயம்… மீனவர்களுக்கே தகவல் இல்லையா? பெரியநீலாவணையில் சர்ச்சை

August 15, 2026
இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் இனி 100,000 அபராதம்!

August 15, 2026
ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை
செய்திகள்

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
Next Post
வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

வெனிசுலா நிலநடுக்கம்; 6 நாட்களுக்குப் பிறகு 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.