இணையம் ஊடாக வியாபாரம் செய்து அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியும் என ஆசை காட்டி ரூ.43,86,219 பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பேஸ்புக் மற்றும் டெலிகிராம் செயலிகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசாரணைகளில், சந்தேகநபர் மொத்தமாக ரூ.43,86,219 பணத்தை மோசடி செய்துள்ளதுடன், அதில் ரூ.5 இலட்சத்தை தனிப்பட்ட தேவைகளுக்காக முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








