ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த டிப்போவுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (02) உத்தரவிட்டுள்ளார்.
ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொறுப்பு பொதுச் சுகாதார பரிசோதகர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் பேருந்து டிப்போ வளாகத்தை சுத்தப்படுத்துமாறு நான்கு முறை சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் (Red Notices) வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததையடுத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டிப்போ நிர்வாகத்துக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஹோமாகம நீதவான் உத்தரவிட்டார்.








