வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது கெப் வண்டி ஒன்று மோதியதில் 9 தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 5 தேரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 தேரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 13 தேரர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டியை 11 வயது சிறுவன் ஒருவர் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியின்றி அவர் வாகனத்தை இயக்கியிருந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தாய்லாந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








