மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்கு சென்ற சிறுமி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு (டியூஷன்) செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
எனினும், மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்காததைத் தொடர்ந்து, 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கும் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தாலோ அல்லது அவர் எங்காவது காணப்பட்டாலோ, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது பெற்றோருக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அவசரமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்புவதற்கு உதவும் வகையில், இந்தத் தகவலை சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்து அதிகளவில் பரப்புமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








