முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழும், மற்றுமொரு அரச நிறுவனத்திலிருந்தும் ஒரே காலப்பகுதியில் இரு வேறு வழிகளில் சட்டவிரோதமாக மாதாந்த சம்பளம் மற்றும் நிதியைப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் கடந்த ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவரது சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்ததுடன், அவரை ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.








