கொலன்னாவ நகர சபை தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்கள் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்ட போது, அவர் மற்றொருவரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்துள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர், அவரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தனர்.
இதன்போது 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வருகை தந்த போதைப்பொருள் விற்பனையாளரை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளரே கொலன்னாவ நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டு்ளளது.







