திவுல்வெவ – வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையில் இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







