தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் முறைப்படி கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தங்கம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.








