2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தெரிவின் அடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்டத்தின் கீழ் பல்கலைக்கழகப் படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், எதிர்வரும் 2026 செப்டம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி, தெரிவு செய்யப்பட்ட பாடநெறிகள் மற்றும் பதிவு நடவடிக்கைகளுக்குத் தேவையான மேலதிக தகவல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.








