ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்து வருகிறது.
இதன்படி, இன்று (11) காலை உலகின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
கடந்த மே மாதத்துக்குப் பின்னர் பிரெண்ட் கச்சா எண்ணெய் பதிவுசெய்துள்ள அதிகபட்ச விலையாக இது அமைந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர் எல்லையை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.








