சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தயாராகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளான.
இதற்கு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் அதனை உறுதிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது, ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் தினசரி சேவைக்கு ரூ.4,500 ஆகவும், வழக்கமான சேவைக்கு ரூ.3,500 ஆகவும் உள்ளது.
இதேபோல், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான கட்டணங்களும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.2,500 ஆக இருந்த கட்டணம் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.








