இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழை மூன்றாவது மொழியாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கோ, தமிழ் மக்களின் பிரநிதிகளுக்கோ, உள்ளூராட்சி சபைகளுக்கோ அறிவிக்காது அவர்களது பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களம் பெயர் பலகைகளை இட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்தோடு இலங்கையின் மொழி உரிமைச் சட்டத்தை மீறி தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக பெயர் பலகைகளில் அடையாளப்படுத்தி உள்ளது.
இலங்கையின் மொழி உரிமைச் சட்டம், 1978 அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் மற்றும் 1987-1988 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் இலங்கையின் அரசகரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கது.








