தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தான் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரவித்துள்ளார்.
மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாததால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் உணர்ந்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கடந்த (31) நடைபெற்ற விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.








