78வது சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் இன்று காலை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எஸ்.ரதாநாயகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அசித குணதிலக்க தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்ட கைதிகளாவர்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நன்றி செலுத்திய பின்னர் வீடுகளுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.











