காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இளம் யுவதிக்கு மயக்க மருந்து கலந்த உணவு வழங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (17) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து. சுமார் ஒரு மணிநேரம் வழக்காடல் நடைபெற்றதையடுத்தை தொடர்ந்து, அவரை மார்ச் 3ஆம் (14 நாட்கள்) தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.








