Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

சுரேஷ் சாலே கைது; அரசாங்கத்தின் ‘நாடகமா?’ ஐ.ம.ச கேள்வி

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பனிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் நாடகமா என கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பிரதான சுத்திரதாரியை அடையாளம் காண்பதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், தற்பொழுது அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் 21ம் திகதி அண்மிக்கும் நிலையில் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி அண்மைக்கும் நிலையில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்தக் கைதுகள் வெறும் நாடகமாக இருக்கக் கூடாது, ஏப்ரல் 21 ஆம் திகதி அண்மிக்கும் நேரத்தில் இவ்வாறான கைதுகள் நடைபெறுவது சந்தேகத்தை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி அண்மிக்கும்போது இவ்வாறான காட்சிகளை நடத்துவது, நாடகங்களை நடத்துவதை மக்கள் விரும்பவில்லை எனவும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்களோ அவர்களது குடும்பத்தினரோ கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையோ இதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கே 99 விதமான கத்தோலிக்கர்கள் வாக்களித்தனர் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் வாக்களித்தனர் என சுட்டிக்காட்டி உள்ளார்.

நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கையில்லையே கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த அரசாங்கத்தை பாராட்டி இருந்தார் எனவும் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் வகையிலான சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

என்னிடம் ஏப்ரல் 21ம் திகதி அண்மைக்கும் நேரம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஒரு நாடகமாகவே நாங்கள் பார்க்கின்றோம், சலேவை கைது செய்வது தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த விசாரணைகளை முடிவுறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகள் குறிப்பாக நாட்டு மக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் இந்த ஏப்ரல் மாத 21ம் திக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்த வேண்டும். இந்த விசாரணைகளை முடிவெடுக்க வேண்டும் என கோருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை
செய்திகள்

சித்திரவதையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் சலே; கம்மன்பில கவலை

June 7, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
Next Post
செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

செவ்வாய் கிரக திட்டத்திற்கு முன் நிலவில் குடியிருப்புகள் அமைக்கும் எலோன் மஸ்க்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.