களனிவெளி ரயில் பாதையில் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பேஸ்லைன்–நாரஹேன்பிட்ட இடையிலான கோட்டை வீதி ரயில் கடவை மே 23 முதல் மே 24 வரை முழுமையாக மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டைக்கும் நாரஹேன்பிட்டைக்கும் இடையிலான சில ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படுவதுடன், சில சேவைகள் மாற்று வழியில் இயக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








