உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறிகள் நேபாளப் பகுதி வழியாக ஏறி, புதிய உலகச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைக்கு இடையில், கடல் மட்டத்திலிருந்து 8,849 மீற்றர் (29,032 அடி) உயரத்தைக் கொண்டுள்ள இந்த எவரெஸ்ட் சிகரத்திற்கு, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் வழியாகவும் மலையேற முடியும்.
இதற்கு முன்னதாக, நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் 223 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததே சாதனையாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 மலையேறிகள் வெற்றிகரமாகச் சிகரத்தை எட்டிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








