சதுரங்கத்தை (செஸ்) வெறும் விளையாட்டாக மட்டுமன்றி, அதற்கும் அப்பால் ஒரு பாடசாலைப் பாடமாக கற்பது குறித்த “கல்விசார் சதுரங்கம்” மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் இலங்கை பிரதிநிதி திசால் சேனாதீர நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த மாநாடு உலகின் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கடந்த 20ஆம் திகதி முதல் நேற்று 24ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றது.
தற்போது பாடசாலைகளில் சதுரங்கம் ஒரு விளையாட்டாக சில மாணவர்களின் பங்களிப்புடன் மட்டுமே விளையாடப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய “கல்விசார் சதுரங்கம்” முறையை இலங்கையிலுள்ள அனைத்து மாணவர்களும் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பாடமாக கற்கும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக சேனாதீர தெரிவித்தார்.

இது குறித்து தாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதன் மூலம் 4-வது தொழிற்புரட்சியின் சவால்களை தற்போதைய இளம் மாணவர் தலைமுறையினர் எளிதில் வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட சேனாதீர நேற்று இரவு 09.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL- 309 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.








