நாவலப்பிட்டிய பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற துயரகரமான விபத்தில், பாடசாலை மாணவன் ஒருவரும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது, பிரதான வீதியோரத்தில் இருந்த பெரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததே இந்த அனர்த்தத்திற்குக் காரணமாகியுள்ளது.
விபத்தின் தாக்கத்தால் முச்சக்கரவண்டியில் பயணித்திருந்த பாடசாலை மாணவன் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








