Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

1976 முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான இந்த திரைப்படங்களின் பாடல்களை, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோசாவன் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் இளையராஜா பதிவேற்றியதையடுத்து, அவற்றின் காப்புரிமையை கோரி நடவடிக்கை எடுத்ததாகக் கூறி சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

1957 ஆம் ஆண்டின் இந்திய காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில், திரைப்படத்திற்காக இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் செய்தால், அந்தப் படைப்பின் முதல் காப்புரிமை தயாரிப்பாளருக்கே உரியது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தயாரிப்பாளர்கள் தங்களது உரிமையை சரிகம நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால், குறித்த பாடல்களுக்கு இளையராஜா தனிப்பட்ட உரிமை கோர முடியாது என்ற சரிகம தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து, இடைக்காலத் தடையை நீக்குமாறு இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் காரணமாக, வழக்கு விசாரணை நிறைவடையும் வரை குறித்த 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியில் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை தொடர்ந்தும் அமலில் இருக்கும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
செய்திகள்

அயகமவில் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!

August 16, 2026
சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!
காணொளிகள்

சவுதி வீட்டுவேலைக்குச் சென்று கொடுமைகளை அனுபவிக்கும் மட்டக்களப்பு பெண் – காப்பாற்றுமாறு உருக்கமான கோரிக்கை!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; முஸ்லிம் சமூகத்தை வம்புக்கு இழுக்கும் முயற்சி – ரவூப் ஹக்கீம்

August 16, 2026
வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் வீடு உடைத்து கொள்ளை; பெண் மீதான பாலியல் வன்முறை தொடர்பில் ஐவர் கைது!

August 16, 2026
பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!
செய்திகள்

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!

August 16, 2026
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

August 16, 2026
Next Post
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.