Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

தலைவர் வெளியிட்டுள்ள இராஜினாமா கடிதத்தில், 2025 மார்ச் 2ஆம் தேதி உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து சங்கத்தின் நிதி மற்றும் நிர்வாகச் சவால்களை எதிர்கொண்டு அதன் செயல்திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முயற்சிகளின் பலனாக, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவுச் சங்கங்களில் முதலிடத்தைப் பெற்று, மேல் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் பாராட்டையும் சங்கம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அண்மைக்காலமாக சங்கத்தின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு எதிராக உப தலைவரும் தமது கடுமையான எதிர்ப்பை பலமுறை வெளிப்படுத்தியிருந்ததாகவும் இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தகைய தலையீடுகள் குறித்து பலமுறை எச்சரித்த போதிலும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும், இதன் காரணமாக பணிப்பாளர் சபைக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவுச் சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளுக்குப் பதிலாக, உரிய அனுபவமற்றவர்களின் தலையீடுகள் இடம்பெறுவதாகவும், அந்தச் சூழலில் தலைவர் பதவியின் கண்ணியத்தைப் பாதுகாத்து தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த ஜூலை 6ஆம் திகதி முதல் தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது
செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

August 25, 2026
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

August 25, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு
காணொளிகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

August 25, 2026
வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
செய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

August 25, 2026
துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
செய்திகள்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

August 25, 2026
போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்
செய்திகள்

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

August 25, 2026
Next Post
கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்

கட்டுநாயக்கில் இருந்து புறப்பட்ட துருக்கி விமானத்தில் பறவை மோதல்; வானில் எரிபொருளைக் குறைத்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.